தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆவடி பேருந்து நிலையம் எதிரே காவல்துறையிடம் இருந்து ரூ.100 கோடி மதிப்பு நிலம் மீட்பு; வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி

ஆவடி, ஆக. 20: ஆவடி பேருந்து நிலையம் எதிரே தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு பட்டாலியன் காவல்துறை சார்பில் பரணி சைக்கிள் ஸ்டாண்ட், பரணி கேன்டின் ஆகியவை கடந்த 30 ஆண்டாக இயங்கி வருகிறது. ஆவடி வருவாய் துறைக்குச் சொந்தமான சுமார் 97 சென்ட் நிலத்தை காவல் துறையினர் வணிக நோக்கத்தில் இருசக்கர வாகனம் மற்றும் சைக்கிள் பார்க்கிங் செய்யும் இடமாக பயன்படுத்தி வந்ததாக புகார் எழுந்தது. இந்த இடத்தின் மதிப்பு ரூ.100 கோடி இருக்கும். அந்த இடத்தில் ரயிலில் பயணம் செய்யும் பொதுமக்கள் மற்றும் காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள் ஆகியோர் சுமார் 1,650 இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வருகின்றனர். இதன்மூலம் ஒரு மாதத்திற்கு ரூ.4.5 லட்சம் வரை வருவாய் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது.

Advertisement

இந்தநிலையில் கலெக்டர் உத்தரவின்பேரில் வருவாய்த்துறை சார்பில் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில், ஆவடி வட்டாட்சியர் காயத்ரி, ஆவடி துணை வட்டாட்சியர் விஜய் ஆனந்த் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று நேரில் ஆய்வு செய்து பார்க்கிங் பகுதிக்கு சீல் வைக்கும் பணியில் ஈடுப்பட்டனர். மேலும் இன்று முதல் பரணி சைக்கிள் பார்க்கிங் பகுதியில் வாகனம் நிறுத்த அனுமதி இல்லை எனவும், உள்ளே இருக்கும் வாகனங்களை வெளியே அனுப்பி கண்காணிக்கும் பணியில் வருவாய் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 30 ஆண்டு காலமாக காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்த சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை வருவாய் துறையினர் மீட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement