தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சோழவரம் ஏரி உபரிநீர் திறப்பால் 50 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின: விவசாயிகள் வேதனை

புழல், நவ.18: சோழவரம் ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு செல்லும் உபரிநீர் கால்வாய் முறையாக தூர் வாராததால் 50க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Advertisement

சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் பங்கு வகித்து வரும் 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 624 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. 18.86 அடி உயரம் கொண்ட சோழவரம் ஏரியில் 14.16 அடி உயரத்தில் நீர்மட்டம் உள்ளது. ஏரிக்கு 27 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. புழல் ஏரிக்கு 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. ரூ.40 கோடி மதிப்பீட்டில் ஏரிக்கரை பலப்படுத்தப்படும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஏரிக்கரை சாலை முழுவதும் கரைகள் உள்வாங்கி சாலைகள் சேதமடைந்து உள்ளன.

ஏரிக்கரை சேதம் காரணமாகவும், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோழவரம் ஏரியிலிருந்து நேற்று முன்தினம் முதல் கொசஸ்தலை ஆற்றுக்கு திறக்கப்பட்டு வந்த 200 கன அடி உபரிநீர் நேற்று 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, முறையான முன்னறிவிப்பு ஏதும் இன்றியும், உபரிநீர் கால்வாய் முறையாக தூர்வாரப்படாமலும் உபரிநீர் திறக்கப்பட்டதால் 50க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. கால்வாய் புதர்மண்டி கிடப்பதால் ஏரியிலிருந்து திறக்கப்பட்ட உபரிநீர் முழுவதும் ஆற்றுக்கு செல்லாமல் கால்வாயில் இருந்து வெளியேறி விளை நிலங்களை மூழ்கடித்துள்ளதால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாழாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். எனவே, தமிழ்நாடு அரசு நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் எனவும், உபரிநீர் செல்லும் கால்வாயை முறையாக தூர்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

Advertisement