தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பள்ளிப்பட்டு அருகே பரபரப்பு கிராம மக்களுக்கு திடீர் வாந்தி, மயக்கம்

Advertisement

பள்ளிப்பட்டு, அக்.18: பள்ளிப்பட்டு அருகே, கிருஷ்ணமராஜகுப்பம் ஊராட்சி, கன்னிகாம்பாபுரம் தெலுங்கு காலனி கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், முதியோர் என 10க்கும் மேற்பட்டோர் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக வாந்தி, வயிற்றுப்போக்கால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் அக்கிராமத்தைச் சேர்ந்த முனியம்மா(50), ரேவதி(45), ராணியம்மாள்(55), சரோஜா(75), சின்ன ரோசய்யா(65), சம்பூர்ணம்(65), பிந்து(24), ஸ்ருதி(17) உட்பட 8 பேருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 3 பேர் திருவள்ளூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம் சார்பில், குடிநீர் வழங்கப்பட்டு வரும் பைப் லைன்கள் கழிவுநீர் கால்வாயில் உள்ளதாகவும், ஓரிரு இடங்களில் பைப் லைன்களில் கசிவு ஏற்பட்டு கழிவுநீர் கலந்து வருவதாக கூறப்படுகிறது. கிராமத்தில் சிறுவர்கள் முதல் முதியவர் வரை பலர் உடல் நிலை பாதிக்கப்பட்டு வருவதால், கிராமத்தில் மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று குடிநீர் டேங்க், பைப் லைன்கள் முறையாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement