தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செங்குன்றத்தில் தெரு நாய்கள் கடித்து 10 பேர் காயம்

புழல், அக்.17: செங்குன்றம் அடுத்து பிள்ளையார் கோயில் தெருவில் சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகளில், ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இத்தெரு வழியாக தான் நடை பயிற்சிக்கு செல்வோரும், பள்ளி செல்லும் மாணவிகளும் சென்று வருகின்றனர். இதனுடைய தெருவின் நடுவில் பேரூராட்சி கட்டுப்பாட்டில் சிறுவர் பூங்கா அமைந்துள்ளது. அதனைச்சுற்றி வீட்டில் உள்ள குப்பைகளை சிலர் வீசி செல்வதால், தெருநாய்களின் எண்ணிக்கையும், தொல்லையும் நாளுக்குநாள் பெருகிக்கொண்டு வருகிறது. இதனால், நடைபயிற்சிக்கு செல்வோர் மற்றும் பணிக்கு செல்வோர்களையும், அத்தியாயவசிய பொருட்கள் வாங்க செல்வோரையும் அந்த தெருவில் உள்ள தெரு நாய்கள் ஒவ்வொருவரையும் கவ்வி பிடித்து கடித்து வருகிறது.

Advertisement

இதில் பலருக்கு கால், முதுகு பகுதிகளில் நாய்க்கடி ஏற்பட்டு, அருகில் உள்ள நாரவாரிகுப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கினர். அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தில் சுமார் 10க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தெருநாய்கள் தொல்லையால் பாதிப்படையும் அப்பகுதி மக்கள், இதுகுறித்து பலமுறை நாரவாரிகுப்பம் பேரூராட்சிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுத்து சாலைகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடிக்க எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement

Related News