தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புட்லூர் ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் தண்ணீரால் மாணவர்கள் அவதி: விஷப்பூச்சிகள் நடமாட்டம் உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

திருவள்ளூர், அக்.16: புட்லூர் ரயில்வே சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் விஷ பூச்சிகள் நடமாட்டம் காரணமாக அவதிக்குள்ளாகும் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் உயிர் பயத்துடன் செல்வதாக குற்றம் சாட்டியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது மழைக்காலம் தொடங்கி இருப்பதால், மழைநீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், கால்வாய் அடைப்புகளை சீரமைத்தல், கால்வாய்களில் குப்பை தேங்கியிருப்பதை அப்புறப்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகளையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில், திருவள்ளூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட புட்லூர் ஊராட்சியில் உள்ள உல்லாச நகர் பகுதியில் கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதனால், இப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் செல்லக்கூடியவர்கள், வேலைகளுக்கு செல்லக்கூடியவர்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ - மாணவிகள் ரயில் நிலையம் அருகே உள்ள சுரங்கப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், கடந்த சில நாட்களாக பெய்த லேசான மழைக்கே இந்த சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் கிட்டத்தட்ட 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றிசெல்ல வேண்டிய சூழ்நிலை நிலை உள்ளது. தற்போது, இந்த சுரங்கப்பாதையில் மழை நீரானது அதிகமாக தேங்கி நிற்பதால் பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லக்கூடிய மாணவர்கள், வேலைக்குச் செல்லக்கூடிய பொதுமக்கள் தினந்தோறும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் இந்த தண்ணீரில் செல்வதால் பழுதடைந்து விடுகிறது. இதனால், பெண்கள் தங்களுடைய வாகனத்தை இயக்க முடியாமல் தவித்து வருகின்றனர். சுரங்கப் பாதையில் தண்ணீர் இருப்பதால் சுரங்கப்பாதைக்கு மேலே உள்ள இருப்புப் பாதையை கடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் விபத்துக்கள் ஏற்படும் நிலையும் காணப்படுகிறது. தொடர்ந்து, இங்கு தேங்கி நிற்கும் தண்ணீரினால் விஷப்பூச்சிகள் வருகின்றன. இதனால், மாணவர்கள் பயந்த நிலையில் அதை கடந்து செல்ல வேண்டிய நிலைமை உள்ளது. எனவே, உடனடியாக சுரங்க பாதையில் உள்ள நீரை வெளியேற்றி சீரமைத்து மக்களின் பயன்பாட்டிற்கு உடனடியாக கொண்டு வர வேண்டும் என்று உல்லாச நகர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டு மழை காலத்திலும் இது போன்ற நிலை இருப்பதாக தொடர்ந்து புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இனிமேலாவது இதற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement