தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மணலியில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.50 கோடி மதிப்பில் 25 ஏக்கர் அரசு நிலம் மீட்பு: அதிகாரிகள் நடவடிக்கை

மாதாவரம், அக்.16: மணலியில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.50 கோடி மதிப்பிலான 25 ஏக்கர் அரசு நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். சென்னை மணலி சடையன்குப்பம் மற்றும் பர்மாநகர் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் அரசுக்கு சொந்தமான மேய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்நிலையில், தனியார் சிலர் அரசு புறம்போக்கு நிலத்தை பயன்படுத்தி வருதோடு, பிளாட்டுகளாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக மணலி மண்டல அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து, உதவி ஆணையர் தேவேந்திரன், உதவி பொறியாளர் விஜய் ஆகியோர் கொண்ட குழுவினர் சடையன்குப்பம் பர்மா நகர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அரசுக்கு சொந்தமான சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான 25 ஏக்கர் அரசு மேய்கால் புறம்போக்கு நிலம், தனியார் கட்டுப்பாட்டில் இருப்பதும், அதில் ஒரு பகுதியை வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.

Advertisement

இதையடுத்து, தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு நிலத்தை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர். மேலும், 3 இடங்களில் அரசு நிலம் என்ற அறிவிப்பு பலகை வைத்தனர். மேலும், மீட்கப்பட்ட இடத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க பசுமைக் காடு அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் மீட்கப்பட்ட அரசு நிலத்தில் வைத்திருந்த அறிவிப்பு பலகையை அகற்றிச் சென்றனர். அரசின் அறிவிப்பு பலகையை அப்புறப்படுத்திய மர்ம நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். சடையன்குப்பம் பர்மா நகர் பகுதியில் ஆக்கிரமிப்பு அரசு நிலம் மீட்கப்படும், என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், அரசு அறிவிப்பு பலகையை அகற்றிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உதவி பொறியாளர் விஜய் சாத்தாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement