தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் வசூல் ரூ.1.47 கோடி

திருத்தணி, செப்.16: திருத்தணி முருகன் கோயிலில் 26 நாட்களில் பக்தர்கள் உண்டியலில் ரூ.1.47 கோடி செலுத்தி இருந்ததாக திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. திருத்தணி முருகன் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் கோயிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் நகை, பணம், பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். பக்தர்கள் செலுத்தும் காணிக்கை கிருத்திகை முடிந்த நிலையில் எண்ணப்பட்டு கோயில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த 26 நாட்களில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணி திருக்கோயில் இணை ஆணையர் ரமணி தலைமையில் நேற்று நடந்தது. திருக்கோயில் அறங்காவலர்கள் சுரேஷ்பாபு, உஷா ரவி, நாகன் ஆகியோர் முன்னிலையில் 100க்கும் மேற்பட்ட கோயில் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். காலை முதல் மாலை 7 மணி வரை நடைபெற்ற காணிக்கை எண்ணும் பணி நிறைவில் ரொக்கமாக ரூ.1.43 கோடி. திருப்பணி உண்டியல் காணிக்கை ரூ.4.44 லட்சம் என மொத்தம் 1 கோடியே 47 லட்சத்து 60 ஆயிரத்து 49 ரூபாய் ரொக்கம், 732 கிராம் தங்கம், 16,330 கிராம் வெள்ளி காணிக்கை வசூலானதாக கோயில் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement