தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

குடிநீர் தொட்டி பயன்பாடின்றி வீண் காலி குடங்களுடன் மக்கள் போராட்டம்

புழல், ஆக.15: சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம் 23வது வார்டுக்கு உட்பட்ட புழல் அடுத்த காவாங்கரை, அழகிரி தெருவில் சென்னை குடிநீர் வாரியம் சார்பில் அமைக்கப்பட்ட சின்டக்ஸ் குடிநீர் தொட்டி கடந்த சில மாதங்களாக குடிநீர் விநியோகமின்றி உள்ளது. இதுகுறித்து, பலமுறை மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனையடுத்து மாதவரம் மேற்கு பகுதி தேமுதிக செயலாளர் புழல் நாகராஜன் தலைமையில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் செல்வகுமார், நிர்வாகிகள் திருப்பதி, ரோஜாஸ், உமாபதி மற்றும் நிர்வாகிகளுடன் இணைந்து பாதிக்கப்பட்ட மக்கள் காலி குடங்களுடன் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகளுடன், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 4 நாட்களுக்குள் துண்டிக்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்பை மீண்டும் சீரமைத்து, குடிநீர் தொட்டியை நிரப்பி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனைத்தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு, அனைவரும் கலைந்து சென்றனர்.