தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆவடி காவல் ஆணையரக பகுதிகளில் தற்காலிக கொட்டகை அமைத்து பட்டாசு கடைகள் அதிகரிப்பு: தீ விபத்து ஏற்படும் அபாயம்  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

ஆவடி, அக். 14: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தற்காலிக கொட்டகை அமைத்து பட்டாசு கடைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தீ விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதற்கு காவல்துறை அதிகாரிகள் உடனடியாக தடை விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், தீபாவளி பட்டாசு விற்பனை அனைத்து பகுதிகளிலும் மும்முரமாக தொடங்கியுள்ளது. இதற்காக அனுமதி பெற்று பல்வேறு இடங்களில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Advertisement

ஒவ்வொரு வருடமும் தீபாவளியை முன்னிட்டு ஒரு கிலோ பட்டாசு ரூ.300 முதல் 500 வரை போட்டி போட்டு விற்பனை செய்வதால் பல்வேறு தரப்பினர் அதிக லாபம் கிடைக்கும் என்ற நோக்கத்தில் தற்காலிக கொட்டகை அமைத்து பட்டாசு கடை அமைப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தநிலையில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் பட்டாசு கடை அமைக்க உரிமம் கோரி 500 பேர் ஆவடி காவல் ஆணையரகத்தில் விண்ணப்பம் அளித்தனர். பட்டாசு உரிமம் பெற போலீசார், தீயணைப்புத் துறையினர், வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர்கள் என பல்வேறு தரப்பினரிடம் அனுமதி பெற வேண்டும்.

ஆனால் விதிகளை மீறி திரையரங்கம், மார்க்கெட், ரயில் நிலையம், மருத்துவமனை, பள்ளிகள், கல்லூரி ஆகிய பகுதிகளில் தற்காலிக கொட்டகை அமைத்து பட்டாசு கடை நடத்தி லாபம் சம்பாதிக்கும் நோக்கத்தில் வியாபாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்காலிக கொட்டகை அமைத்து இயங்கும் பட்டாசு கடைகளால் தீ விபத்து ஏற்பட்டால் அசம்பாவிதங்கள் அதிகம் நடைபெறும். தற்காலிக கொட்டகை அமைத்து பட்டாசு கடை அமைப்பவர்கள் ஒரு வார காலத்திற்கு காலியிடங்களை வாடகைக்கு எடுத்து தேவையான லாபம் சம்பாதித்துச் சென்று விடுவார்கள். விபத்துக்கள் ஏற்பட்டால் அவர்கள் மீது வழக்கு பதிய முடியாத சூழ்நிலை உருவாகும். கடையை வாடகைக்கு விடும் நில உரிமையாளர்கள் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்ய முடியும். ஆகையால் தற்காலிக கொட்டகை மூலம் பட்டாசு கடை அமைப்பதற்கு காவல்துறை அதிகாரிகள் உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று ஆவடி பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Advertisement