தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆவணி மாத கிருத்திகையையொட்டி திருத்தணி முருகன் கோயிலில் காவடிகளுடன் குவிந்த பக்தர்கள்

திருத்தணி, செப்.13: ஆவணி மாத கிருத்திகையையொட்டி திருத்தணி முருகன் கோயிலில் காவடிகளுடன் குவிந்த பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தனர். முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கும் திருத்தணி முருகன் கோயிலில் கடந்த மாதம் ஆடி கிருத்திகை விழாவில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடிகள் செலுத்தி முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். இந்நிலையில், நேற்று ஆவணி மாதம் கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். ஆடி கிருத்திகை விழாவில் பங்கேற்று காவடிகள் செலுத்த முடியாத ஏராளமான பக்தர்கள் நேற்று அதிகாலை முதலே மலைக்கோயில் படிகள் வழியாகவும், மலைப்பாதை வழியாக வாகனங்களிலும் கோயிலில் குவிந்தனர்.

Advertisement

காவடிகள் செலுத்தி மாட வீதியில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதனால், மலைக்கோயில் மாடவீதிகளில் ஏராளமான பக்தர்களின் காவடி ஓசைகளுடனும், அரோகரா முழக்கங்களால் மலைக்கோயில் விழாக்கோலம் பூண்டது. பொது வரிசையில் சுமார் 3 மணி நேரமும், ரூ.100 சிறப்பு கட்டண வழியில் 2 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். நேற்று மாலை உற்சவர் முருகப் பெருமான் வெள்ளி மயில்வாகனத்தில் எழுந்தருளி மாட வீதியில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆவணி மாத கிருத்திகையையொட்டி ஏராளமான பக்தர்கள் முருகன் கோயிலில் குவிந்து சாமி தரிசனம் செய்து வரும் நிலையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தடையின்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.

Advertisement

Related News