தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிறந்து ஒரு வாரத்தில் ஆண் குழந்தை மரணம்: தாய்ப்பால் கொடுத்தபோது மூச்சுத் திணறல் காரணமா?

ஆவடி, அக்.12: பிறந்து ஒரு வாரத்தில் பச்சிளம் குழந்தை உயிரிழந்ததையடுத்து தாய்ப்பால் கொடுத்தபோது ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆவடியை அடுத்த பட்டாபிராம் ஆயில்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (30). இவரது மனைவி பிரைசியா (28). இவர்களுக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்து குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. வீட்டிற்கு வந்த குழந்தை சிறிது நேரத்தில் அசைவின்றி இருந்ததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

Advertisement

உடனடியாக குழந்தையை ஆவடி அரசு மருத்துமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு குழந்தையை தூக்கிக்கொண்டு வந்தபோது, காரில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தை இறந்ததா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் ஆவடி அரசு மருத்துவமனையில் இருந்து உடலை கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக குழந்தையின் உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Advertisement