தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவள்ளூர் மாவட்டத்தில் கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது

திருவள்ளூர், அக்.12: திருவள்ளூர் மாவட்டத்தில் மழை காரணமாக கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகினர். திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறு, குளம், ஏரிகள் நிரம்பி வருகிறது. இந்நிலையில் மழையின் காரணமாக பேரம்பாக்கத்தில் உள்ள கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மழைநீர் கரை புரண்டு ஓடுவதால், பேரம்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல், சத்தரை பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், தற்போது மீண்டும் தரைப் பாலத்தின் ஒரு பகுதி நேற்று முன்தினம் இரவு அடித்துச் செல்லப்பட்டது.

Advertisement

இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சத்தரை பகுதியில் இருந்து கூவம் ஆற்றின் குறுக்கே ரூ. 14 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளப்பெருக்கு காரணமாக சத்தரை - கூவம் ஆற்றின் வழியாக பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கிச் செல்லாத வகையில் பொதுப்பணித்துறை சார்பில் கரையின் இருபுறமும் தடுப்புகள் அமைத்து பதாகைகள் வைத்துள்ளனர்.

இதன் காரணமாக திருவள்ளூர், கடம்பத்தூர் பகுதியில் இருந்து மப்பேடு, கீழச்சேரி சுங்குவார்சத்திரம், உளுந்தை போன்ற பகுதிகளுக்கு வரும் வாகன ஓட்டிகள் பேரம்பாக்கம் வழியாகச் சென்று சுமார் 5 கிமீ தூரம் சுற்றிக்கொண்டு செல்வதால் பெரிதும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

Advertisement