தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தீயணைப்பு நிலைய அதிகாரி உள்பட இருவர் கைது: வளசரவாக்கத்தில் பரபரப்பு

பூந்தமல்லி, செப்.12: வளசரவாக்கத்தில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தீயணைப்பு நிலைய அதிகாரி உள்பட இருவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். வளசரவாக்கம் அடுத்த ராமாபுரத்தைச் சேர்ந்தவர் அஜீஸ். இவர் அதே பகுதியில் புதிதாக அழகு நிலையம் தொடங்குவதற்காக தீயணைப்புத்துறை சான்றிதழ் கோரி ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்திருந்தார். இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்து மேல் நடவடிக்கை எடுத்து சான்றிதழ் வழங்க ராமாபுரம் தீயணைப்பு நிலைய அதிகாரி இளங்கோவன் ரூ.25 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என கூறியதாகவும், பின்னர் ரூ.10 ஆயிரமாக குறைத்து கேட்டதாகவும் கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத அஜீஸ், சென்னை நகர ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில் புகார் அளித்தார்.

Advertisement

அதன்பேரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் அஜீஸிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை நேற்று கொடுத்து அனுப்பினர். இளங்கோ அறிவுறுத்தலின் பேரில் தீயணைப்பு வீரர் முனுசாமி என்பவரிடம் லஞ்சப் பணம் ரூ.10 ஆயிரத்தை அஜீஸ் கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கையும், களவுமாக பிடித்தனர். அவர்களிடமிருந்து லஞ்சமாக பெறப்பட்ட பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், லஞ்ச ஒழிப்பு போலீசார் தீயணைப்பு துறை அதிகாரி இளங்கோவன் மற்றும் தீயணைப்பு வீரர் முனுசாமி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தீயணைப்பு நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement