தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வீட்டின் அருகே மதுகுடிப்பதை கண்டித்த தொழிலாளியை கொன்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

ஆர்.கே.பேட்டை, ஆக. 12: வீட்டின் அருகே மதுகுடிப்பதை கண்டித்த தொழிலாளியை கல்லால் தாக்கி கொன்ற வாலிபரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் நெசவு தொழிலாளி ராஜேந்திரன்(60). காங்கிரஸ் பிரமுகரான இவர் கடந்த ஜூன் மாதம் தனது வீட்டில் நெசவு பணியில் ஈடுபட்டிருந்தார். நள்ளிரவு, 12.30 மணியளவில் இயற்கை உபாதை கழிக்க வீட்டின் பின்புறம் சென்றார். அப்போது மர்ம நபர் ராஜேந்திரனை கல்லால் அடித்து கொலை செய்துவிட்டு தப்பினார். காலையில் ராஜேந்திரன் கொலை செய்யபட்டு கிடப்பதைக் கண்ட குடும்பத்தினர் ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், எஸ்.ஐ., ராக்கிகுமாரி மற்றும் போலீசார் சந்தேகத்தின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த அரிகிருஷ்ணன்(31) என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில், ஹரிகிருஷ்ணன் நள்ளிரவில் ராஜேந்திரன் வீட்டின் பின்புறம் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்ததை கண்டித்ததால் ஆத்திரமடைந்து கல்லால் தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அரிகிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சிறையில் உள்ள அரிகிருஷ்ணன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்பி விவேகானந்த சுக்லா, மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரைத்தார். இதையடுத்து, அரிகிருஷ்ணனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் பிரதாப் நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து, போலீசார் அரிகிருஷ்ணனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.