தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருத்தணி கோயிலுக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்பு சொத்துகள் மீட்பு: ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி நடவடிக்கை

திருத்தணி, டிச. 11: திருத்தணி சுப்பிரமணிய சாமி கோயிலுக்கு சொந்தமான .25 கோடி மதிப்புள்ள சொத்துகள் நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது. திருத்தணி வட்டம் மற்றும் நகரம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்க கோரி வேலூர் இணை ஆணையர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கோயில் சொத்து ஆக்கிரமிப்புதாரர்களை வெளியேற்றுமாறு கடந்த 8ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி, கோயிலுடன் இணைந்த வசந்த உற்சவ கட்டளை மற்றும் அகண்ட கட்டளைக்கு சொந்தமாக சென்னையில் உள்ள 9575 சதுர அடி கொண்ட கட்டிட வளாகத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்த 503, தங்கசாலை தெருவில் உள்ள எண் 503, 507, தியாகராஜ பிள்ளை தெருவில் எண் 3 மற்றும் சுப்பு செட்டி தெருவில் உள்ள எண் 7 ஆகிய இடங்களில் இருந்த வணிகம் மற்றும் குடியிருப்புக்காரர்களை அகற்றும் பணி நேற்று நடந்தது.

Advertisement

அறநிலையத்துறை திருத்தணி இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் க.ரமணி, திருவள்ளூர் மண்டல இணை ஆணையர் தி.அனிதா, சென்னை 1வது உதவி ஆணையர் சிவகுமார், கோயில் உதவி ஆணையர் க.விஜயகுமார், வருவாய்த்துறையினர், காவல்துறையினர் மற்றும் மின்வாரிய அலுவலர்கள், சிறப்பு பணி அலுவலர்களான சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட செயல் அலுவலர்கள், ஆய்வர்கள், தனி வட்டாட்சியர், திருவள்ளூர் ஆலய நிலங்கள் நில அளவையர்கள், கோயில் கண்காணிப்பாளர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் முன்னிலையில் இந்த பணி மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் சுமார் ரூ.25 கோடி மதிப்புள்ள சொத்து மீட்கப்பட்டு திருவள்ளூர் உதவி ஆணையர் சிவஞானம் மூலம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் வசம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

Related News