தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆன்லைன் டிரேடிங் உள்ளிட்ட குற்றங்களில் பணத்தை இழந்தவர்களுக்கு ரூ.63.40 லட்சம் ஒப்படைப்பு: ஆவடி காவல் ஆணையர் வழங்கினார்

ஆவடி, செப்.11: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களில் சிலர் ஆன்லைன் பங்கு வர்த்தகம் மற்றும் பகுதி நேர வேலை வாய்ப்பு என்ற பெயரில் பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்கள், ஆவடி காவல் ஆணையாளர் சங்கரிடம் புகார் அளித்திருந்தனர். இந்தநிலையில், இணையவழி குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையாளர் அர்னால்ட் ஈஸ்டர் மேற்பார்வையில், இணையவழி குற்றப்பிரிவு ஆய்வாளர்கள், பொதுமக்கள் பணம் செலுத்திய வங்கிக் கணக்குகளை அடையாளம் கண்டு, சம்பந்தப்பட்ட வங்கி கிளைகளுக்கு கடிதம் கொடுத்து, மோசடி நபர்களின் வங்கி கணக்குகளை முடக்கினர். சைபர் க்ரைமில், கடந்த ஆகஸ்ட் மாதம் 9 வழக்குகளில் மொத்தம் 26 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோல், ஆகஸ்ட் 6ம் தேதி முதல் இம்மாதம் 9ம் தேதி வரை மோசடி நபர்களின் வங்கி கணக்குகளில் இருந்து 29 வழக்குகளில் மொத்தம் ரூ.63,40,272 பணம் மீட்கப்பட்டுள்ளது. அந்த பணம், நீதிமன்ற ஆணை பெற்று ஆன்லைன் மோசடி மூலமாக பணத்தை இழந்தவர்களுக்கு மீட்டுக் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, ஆவடி காவல் ஆணையாளரிடம் அதற்கான சான்றிதழை பெற்று, அவருக்கு நன்றி தெரிவித்தனர். இணையவழி மோசடிகள் மூலமாக பொதுமக்கள் இழந்த பணத்தை மீட்டு கொடுத்த ஆவடி இணையவழி குற்றப்பிரிவு போலீசாரை ஆவடி காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார்.

Advertisement

Advertisement