தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஆய்வாளர் கைது: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

ஆவடி, அக்.8: புதிய வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பாக்கம் மின்வாரிய ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஆவடி அடுத்த திருநின்றவூர் பாலவேடு ஏ.என்.எஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (40). ஆவடி தனியார் நிறுவனத்தில் ஜூனியர் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர், திருநின்றவூர் அடுத்த பாலவாக்கம் ஏஎன்எஸ் நகரில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதற்காக மின் இணைப்பு கேட்டு பாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இதற்காக அவர் முன்னதாக ரூ.5525 செலுத்தியுள்ளார். அதன்படி அவரது வீட்டுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில் மின்வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக பணியாற்றி வரும் ரஜினி (40) என்பவர் மின் இணைப்பு வழங்கியதற்காக ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டு வீட்டின் உரிமையாளர் சங்கரிடம் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து சங்கர், திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு தடுப்புப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கணேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் தமிழரசி, மாலா ஆகியோர் அடங்கிய குழுவினர், ரசாயனம் தடவிய 3 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை சங்கரிடம் கொடுத்து அதனை ரஜினியிடம் கொடுக்குமாறு கூறியுள்ளனர். அதன்படி, நேற்று மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தில் ரஜினியிடம் லஞ்ச பணத்தை சங்கர் கொடுத்தபோது, மறைந்திருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை பிடித்தனர். பின்னர், கைதான ரஜினியிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement