தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

திருவாலங்காடு ஆள் கடத்தல் வழக்கில் புழல் சிறையில் 3 மணி நேரம் நடந்த அடையாள அணிவகுப்பு

புழல், ஆக. 8: திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அடுத்த களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ், தேனியைச் சேர்ந்த விஜய ஆகியோர் கடந்த ஏப்ரல் 15ந் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனுஷின் தம்பியான இந்திரச்சந்த் என்பவர் கடந்த ஜூன் 7ந் தேதி மர்ம கும்பலால் ஏடிஜிபி ஜெயராம் காரில் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்த கடத்தல் வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ, ஏடிஜிபி ஜெயராமிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இந்தநிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளை பாதிக்கப்பட்ட சிறுவன் அடையாளம் காட்டும் வகையில் நேற்று அடையாள அணிவகுப்பு நடைபெற்றது.

கடத்தப்பட்ட சிறுவன் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அம்பத்தூர் விரைவு நீதிமன்ற நடுவர் மகாசக்தி முன்னிலையில் அடையாள அணிவகுப்பு நடைபெற்றது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் விஜயயின் தந்தை வனராஜ், விருப்ப ஓய்வு பெற்ற காவலர் மகேஸ்வரி, கணேசன், மணிகண்டன், சரத்குமார், சுவீட்குமார், டேவிட் ஆகிய 7 பேர் சிறையில் இருந்த மற்ற கைதிகள் என 20க்கும் மேற்பட்ட கைதிகளை கொண்டு இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிறையில் அடையாள அணிவகுப்பு நடத்துவதற்காக பிரத்யேகமாக நிறுவப்பட்டுள்ள அறையில் கருப்பு கண்ணாடி போடப்பட்ட அறைக்குள் நீதிபதி முன்னிலையில் பாதிக்கப்பட்ட சிறுவன் அமர்த்தப்பட்டு அறையின் வெளியே கைதிகள் ஒவ்வொருவராக அணிவகுப்பு செய்யப்பட்டனர். சுமார் 3 மணி நேரம் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து அடையாள அணிவகுப்பு தொடர்பான இந்த அறிக்கை, வழக்கு நடைபெற்று வரும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related News