தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவள்ளூரில் இயற்கை வேளாண் சந்தை: துணை இயக்குநர் தகவல்

திருவள்ளூர், நவ.7: திருவள்ளூர் உழவர் சந்தை வளாகத்தில், வரும் 9ம்தேதி இயற்கை வேளாண் சந்தை நடைபெறுகிறது என்று துணை இயக்குநர் சசிரேகா தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்ட வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனை துறை துணை இயக்குநர் சசிரேகா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: திருவள்ளூர் உழவர் சந்தையில் மாவட்ட கலெக்டர் பிரதாப் உத்தரவின்பேரில், இயற்கை வேளாண் சந்தை ஒவ்வொரு மாதமும் 2வது ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்பேரில், வேளாண் விற்பனை துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் இயற்கை விவசாய ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த விவசாயிகள் ஒன்றிணைந்து இயற்கை சந்தையை சிறப்பாக நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நடந்து முடிந்த இயற்கை வேளாண் சந்தைகளில் பொதுமக்கள் திரளாக வந்து, மிகுந்த ஆர்வத்துடன் பார்வையிட்டு இயற்கை பொருட்களை வாங்கிச் சென்றனர். தற்போது, பொதுமக்களுக்கு இயற்கை விளை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு அதிகம் இருப்பதால், இயற்கை பொருட்களை வாங்கி பயன்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில், வரும் 9ம்தேதி காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை திருவள்ளூர் உழவர் சந்தை வளாகத்தில் இயற்கை வேளாண் சந்தை நடைபெறவுள்ளது. எனவே, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள இயற்கை விவசாயிகள் அனைவரும் தங்கள் விளை பொருட்களை விற்பனை செய்ய உள்ளனர். அப்போது, பாரம்பரிய அரிசி வகைகள், சிறுதானியங்கள், காய்கறிகள், பழவகைகள், கீரை வகைகள், இயற்கை விதைகள், மூலிகை பொருட்கள் மற்றும் இயற்கை அழகு சாதன பொருட்கள் ஆகியவை விற்பனை செய்யப்பட உள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் இயற்கை வேளாண் சந்தையில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News