தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருத்தணியில் ஆபத்தான முறையில் தண்டவாளம் கடக்கும் பயணிகள்: ரயில்வே போலீசார் மெத்தனம்

திருத்தணி, அக்.7: திருத்தணி ரயில் நிலையத்தில் ஆபத்தான முறையில் தண்டவளத்தை பயணிகள் கடந்து செல்வதை, ரயில்வே போலீசார் வேடிக்கை பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருத்தணி ரயில் மார்க்கத்தில் விரைவு ரயில்கள் மற்றும் சென்னை - திருத்தணி இடையில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் உட்பட நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர். இதில் காலை நேரங்களில் சென்னைக்குச் செல்லும் பயணிகள் மற்றும் பூக்கள் எடுத்துச்செல்லும் வியாபாரிகள் ரயிலில் அமர்ந்து பயணம் செய்யவும், எளிதாக ரயில் நிலையத்தை சென்றடையவும் தண்டவாளத்தை கூட்டமாக கடந்து செல்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு, உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இருப்பினும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தண்டவாளத்தை கடந்து செல்லும் பயணிகளை கண்டு கொள்ளாமல் மெத்தனமாக செயல்படுகின்றனர். இதனால் பெரும்பாலான பயணிகள் தண்டவாளத்தை கடந்து ரயில் மேடைக்குச் சென்று ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். எனவே விழிப்புணர்வு ஏற்படுத்தி, தண்டவாளத்தை கடந்து செல்லும் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருத்தணி ரயில் பயணிகள் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement