தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: பட்டதாரி வாலிபர் கைது

போரூர், டிச.6: சென்னை விருகம்பாக்கம் சாய் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (27). பட்டதாரியான இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர், தனது வீட்டின் அருகே வசிக்கும் 8ம் வகுப்பு மாணவியுடன் இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் பழகி வந்துள்ளார். அப்போது மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மழை காரணமாக பள்ளி விடுமுறை என்பதால் மாணவி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அவரது பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டனர். இதுபற்றி அறிந்த சுப்பிரமணி, இன்ஸ்டாகிராம் மெசெஞ்சர் மூலம் மாணவியை, தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அதன்படி, மாணவி தயக்கத்துடன் சுப்பிரமணி வீட்டிற்கு சென்றுள்ளார். இதை பக்கத்து வீட்டில் வசிக்கும் வித்யா என்பவர் கவனித்துள்ளார்.

Advertisement

சந்தேகமடைந்த வித்யா, 10 நிமிடம் கழித்து சுப்பிரமணி வீட்டின் கதவை தட்டி மாணவி இருக்கிறாரா என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் மாணவி இங்கு வரவில்லை என்று கூறியுள்ளார் உடனே வித்யா, மாணவியின் தாய்க்கு நடந்த சம்பவத்தை போன் செய்து கூறியுள்ளார். இதையடுத்து, மாணவியின் பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மகள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே சுப்பிரமணி வீட்டிற்கு சென்ற பார்த்த போது, அவரது வீட்டின் பாத்ரூமில் மாணவி பாலியல் தொந்தரவுக்கு அளாக்கப்பட்ட நிலையில் மறைந்து இருந்தது தெரியவந்தது.

அதனை ெதாடர்ந்து, மாணவியின் பெற்றோர் சம்பவம் குறித்து விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுப்பிரமணியை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, மாணவியை தவறான நோக்கத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் சுப்பிரமணி மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு போலீசார் கவுன்சலிங் அளித்தனர்.

Advertisement