தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருத்தணியில் அகல் விளக்கு சரிந்து விழுந்ததில் ரூ.1 லட்சம் மின் சாதன பொருட்கள் எரிந்து நாசம்

திருத்தணி, டிச‌.5: திருத்தணியில் மின் சாதன பொருட்கள் பழுது நீக்கும் கடையில் அகல் விளக்கு சரிந்து விழுந்ததில் ரூ.லட்சம் மின் சாதன பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, திருத்தணி நகரம் முழுவதும் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் நேற்று மாலை தீபம் ஏற்றி வைத்து கொண்டாடப்பட்டது. இதில், இந்திரா நகரை சேர்ந்த ஜெயராமன்(42) எலக்ட்ரீசியன். அவர், வீட்டின் மொட்டை மாடியில் ரூபிங் சீட் அமைத்து அதில் டிவி, மிக்ஸி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுது நீக்கும் கடை வைத்துள்ளார். கார்த்திகை தீபத்தையொட்டி, நேற்று மாலை அகல் விளக்கில் தீபம் ஏற்றி வைத்துள்ளார். இரவு 10 மணியளவில் அகல் விளக்கு சரிந்து விழுந்ததில் மின்சாதன பொருட்களில் தீ பற்றிக் கொண்டது. உடனடியாக, திருத்தணி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பழைய மின்சாதன பொருட்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, புகாரின் பேரில் திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement