தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புழல் - செங்குன்றம் இடையே சாலை விரிவாக்க பணி விரைந்து முடிக்கப்படுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

புழல், நவ. 5: புழல் அம்பேத்கர் சிலை - செங்குன்றம் இடையே நடைபெற்று வரும் சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்பில் வாகன ஓட்டிகள் உள்ளனர். சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை, புழல் - அம்பத்தூர் சாலை சந்திப்பில் இருந்து செங்குன்றம் நோக்கி செல்லும் திசையில், புழல் மத்திய சிறைச்சாலையில் இருந்து காவாங்கரை சிக்னல் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தினசரி காலை, மாலை, இரவு நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, ஆங்காங்கே வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Advertisement

ஒருசில நேரங்களில் ஆம்புலன்ஸ் மற்றும் 108 வாகனம் ஆகியவை போக்குவரத்து நெரிசலில் சிக்கி பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து, வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள், பலமுறை போக்குவரத்து நெரிசலான சாலையை அகலப்படுத்தக்கோரி நெடுஞ்சாலை துறையினருக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். கம்பங்களை அகற்ற கோரிக்கை: அதன்படி, தற்போது புழல் அம்பேத்கர் சிலை அருகிலிருந்து செங்குன்றம் நோக்கி செல்லும் திசையில், புழல் சிறைச்சாலையின் சிறிய சுற்றுச்சுவர் அகற்றப்பட்டு, சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியின்போது, சாலை நடுவில் உள்ள மின்சார மின் கம்பங்களை அகற்றாமல் நடைபெற்று வருவதால், உடனடியாக மின் கம்பங்களை அகற்றி, சாலைப்பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement

Related News