தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பழவேற்காடு முகத்துவாரத்தில் கரை ஒதுங்கிய மர்ம பொருள்: போலீசார் தீவிர விசாரணை

பொன்னேரி, டிச.4: பொன்னேரி அடுத்த, பழவேற்காடு கடற்கரையிலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முகத்துவாரம் அருகே மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியதாக திருப்பாலைவனம் காவல் துறையினருக்கும், வருவாய்த்துறையினற்கும் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று கரை ஒதுங்கிய அந்த பொருளை மீட்டு ஆய்வு செய்தனர். ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையம் அருகில் இருப்பதால் விண்வெளி ஆய்வுக்கு பயன்படுத்திய பொருளா அல்லது வேறு ஏதேனும் கப்பல்களில் இருந்து ஒதுங்கிய பொருளா அல்லது கடல் நில அதிர்வுகளை கண்டறியும் கருவியா என திருப்பாலைவனம் காவல் ஆய்வாளர் காளிராஜ் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர். கடந்த 1ம் தேதி இதே போன்ற பொருள் செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் அருகே கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கதாகும். அந்தப் பொருள் கடல் நில அதிர்வினை கண்டறியும் கருவி எனவும், கப்பல்கள் மூலம் இழுத்து செல்லப்படும் போது அறுந்து கரை ஒதுங்கி இருக்கலாமா எனவும் கூறப்பட்டது. இதையடுத்து, கரை ஒதுங்கிய மர்ம பொருளை செங்கல்பட்டு மங்களாபுரத்தில் உள்ள வெடி பொருட்கள் பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Advertisement

Related News