தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டிட்வா புயல் தொடர் மழை திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் வருகை குறைவு

திருத்தணி, டிச.3: டிட்வா புயல் தொடர் மழை காரணமாக திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்து காணப்பட்டது. முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கும் திருத்தணி முருகன் கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். குறிப்பாக விழாக்கள், சுப முகூர்த்த நாட்கள், விடுமுறை நாட்கள் மற்றும் முருகப்பெருமானை தரிசிக்க உகந்த நாளான செவ்வாய்க்கிழமை ஆகிய நாட்களில் பக்தர்கள் கூட்டல் அலைமோதும். பக்தர்கள் பலரும் தங்களது குடும்பத்தினருடன் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்வர்.

Advertisement

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், சமீபத்தில் உருவான டிட்வா புயல் காரணமாக கடந்த 3 நாட்களாக திருத்திணியில் பல்வேறு இடங்களிலும் பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இடைவிடாது பெய்து வரும் சாஅல் மழையால் செவ்வாய்க்கிழமையான நேற்று திருத்தணி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்து காணப்பட்டது. பொது வழியில் சுமார் அரை மணி நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்காமல் நேரடியாக கோயிலுக்குள் சென்று மூலவரை மற்றும் வள்ளி, தெய்வானை, உற்சவர், சண்முகரை பக்தர்கள் மகிழ்ச்சியுடன் தரிசனம் செய்து வழிபட்டு செல்கின்றனர்.

பச்சரிசி மலையில் இன்று மகா தீபம்: திருத்தணி முருகன் கோயிலில் இன்று கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி நேற்று மாலை கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. முதலில் மலைக்கோயில் மாட வதியில் வள்ளி தெய்வானையுடன் சமேத உற்சவர் முருகப்பெருமான் எழுந்தருளி, எதிரில் சொக்கப்பனையில் கோயில் தலைமை அர்ச்சகர் தீபம் ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து, கோயிலுக்கு வடக்கு திசையில் சுமார் 500 அடி உயரத்தில் உள்ள பச்சரிசி மலையில் 150 கிலோ நெய்யுடன் மகா தீபம் ஏற்றப்படுகிறது. மகாதீபம் தரிசனம் செய்த பின்னர் திருத்தணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வீடுகளில் பெண்கள் தீபம் ஏற்றுவார்கள். பச்சரிசி மலையில் தொடர்ந்து மூன்று நாட்கள் மகா தீபம் பிரகாசிக்கும்.

Advertisement

Related News