தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பள்ளிப்பட்டு அருகே உயரழுத்த மின்கம்பியில் சிக்கி ஆண் மயில் பலி

பள்ளிப்பட்டு, டிச.3: பள்ளிப்பட்டு அருகே உயரழுத்த மின்கம்பியில் சிக்கி ஆண் மயில் பரிதாபமாக பலியானது. பள்ளிப்பட்டு அருகே காப்புக் காட்டில் மான், மயில், உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில், நொச்சிலி காப்புக்காடு பகுதியில் நேற்று மதியம் இரை தேடி பறந்து சென்ற மயில் நொச்சிலி மாநில நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள உயரழுத்த மின் கம்பியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து இறந்தது. மயில் மின்சாரம் பாய்ந்து இறந்த சம்பவம் குறித்து பள்ளிப்பட்டு வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இருப்பினும், 2 மணி நேரமாக வனத்துறையினர் வராத நிலையில், சாலையில் இறந்து கிடந்த மயிலுக்கு பாதுகாப்பாக 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காத்திருந்தனர். மாலை 3 மணியளவில் வனவர் கோபி மற்றும் வன காவலர்கள் வந்து இறந்த மயிலை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். சுமார் 8 வயதான ஆண் மயிலுக்கு பிரேத பரிசோதனை முடிந்து அரசு மரியாதையுடன் புதைக்கப்படும், என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement

வேலி அமைக்க வேண்டும்: பள்ளிப்பட்டு பகுதியில் காப்புகாடு அருகே மாநில, மாவட்ட சாலைகளை கடக்கும் மான், மயில்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி இறந்து விடுகிறது. விலங்குகளுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையில் காடுகளுக்கு அருகில் தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என்று வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement

Related News