தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போரூர் ராமநாதீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

பூந்தமல்லி, டிச.2: போரூர் ராமநாதீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். போரூரில் மிகவும் பழமையான சிவகாம சுந்தரி உடனுறை ராமநாதீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அதிகாலை 4 மணியளவில் 6ம் கால யாக பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. காலை 6 மணி அளவில் மகா கடம் புறப்பாடு, யாத்ரா தானமும், 6.30 மணியளவில் மூலவர், ராஜகோபுரம், பரிவார தேவதைகள் விமானம் ஆகியவற்றில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, தேவாரம் திருவாசகம் சிவபுராணம் பாடி புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். அதனைத்தொடர்ந்து, மூலவருக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரமும், விசேஷ பூஜைகளும் நடந்தது. கும்பாபிஷேக விழாவையொட்டி ஆன்மீக சொற்பொழிவு, நாதஸ்வர கச்சேரி உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

Advertisement

கும்பாபிஷேக விழாவையொட்டி மாலையில் பஞ்ச மூர்த்திகள் விசேஷ அலங்காரத்துடன் திருக்கல்யாணம், திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டல பூஜைகள் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவில் போரூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தக்கார் தேன்மொழி, செயல் அலுவலர் ஜெயராமன், திருப்பணிகள் குழு தலைவர் போரூர் மங்களாநகர் நடராஜன், உறுப்பினர்கள் குமரேசன், ரவிச்சந்திரன், மகேந்திரன், ராஜா மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Advertisement

Related News