தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் 3 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

பூந்தமல்லி, நவ.1: இந்து சமய அறநிலையத்துறை சார்பில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் 3 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நேற்று நடத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, கோயில் நிர்வாகம் சார்பில், மணமக்களுக்கு சீர்வரிசை வழங்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் 20 மண்டலங்களில் 25 ஜோடிகள் வீதம் 500 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்படும். இதற்கான செலவுகளை கோயில் நிர்வாகமே ஏற்கும் என்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் 3 ஜோடிகளுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் நேற்று காலை கோயில் இணை ஆணையர் அருணாசலம் தலைமையில் திருமணங்கள் நடந்தன. நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் மூர்த்தி, அறங்காவலர்கள் சந்திரசேகரர், கோவிந்தசாமி, வளர்மதி, சாந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் திருவேற்காடு நகர்மன்ற தலைவர் மூர்த்தி, துணை தலைவர் ஆனந்தி ரமேஷ், முன்னாள் அறங்காவலர் ரமேஷ், கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதில் திருமண வீட்டார், அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோயில் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருமணம் செய்துகொண்ட ஜோடிகளுக்கு திருமாங்கல்யம், ஆடைகள், மாலை, பீரோ, கட்டில் போன்ற சீர்வரிசை பொருட்கள், விருந்து உள்ளிட்டவை கோயில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement