சிறுவாபுரி முருகன் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
பெரியபாளையம், அக்.1: பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரி முருகன் கோயிலில் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். அதன்படி செவ்வாய்க்கிழமை மற்றும் காலாண்டு விடுமுறை என்பதால் நேற்று சிறுவாபுரி முருகன் கோயிலில் கூட்டம் அலை மோதியது. திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானோர் சாமி தரிசனம் செய்ய வந்தனர். பொது தரிசனம், 50 ரூபாய், 100 ரூபாய் கட்டண தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோயிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் கடும் வெயிலை பொருட்படுத்தாமல் வந்து காத்திருப்பு மண்டபம் வழியே கோயிலுக்குள் வந்து சுமார் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Advertisement
Advertisement