தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவள்ளூர் நகராட்சியில் கலைஞர் சிலை: அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

Advertisement

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் கலைஞரின் மார்பளவு வெண்கலச் சிலைக்கு திறப்பு விழா நடைபெற்றது. கலெக்டர் த.பிரபு சங்கர் தலைமை தாங்கினார். எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், எஸ்.சந்திரன், நகர்மன்ற துணைத் தலைவர் சி.சு.ரவிச்சந்திரன், நகர்மன்ற உறுப்பினர்கள் வசந்தி வேலாயுதம், நீலாவதி பன்னீர்செல்வம், அம்பிகா ராஜசேகர், பிரபாகரன், பிரபு, சாந்திகோபி, அயூப்அலி, பாபு, ஜான், ராஜ்குமார், பத்மாவதி ஸ்ரீதர், அருணா ஜெய்கிருஷ்ணன், செல்வகுமார், இந்திரா பரசுராமன், சீனிவாசன், ஹேமலதா நரேஷ், விஜயகுமார், கமலிமணிகண்டன், தனலட்சுமி சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகரமன்ற தலைவர் பா.உதயமலர் பாண்டியன் அனைவரையும் வரவேற்றார். விழாவில் அமைச்சர்கள் ஆர்.காந்தி, கே.என்.நேரு ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கலைஞர் திருவுருவச் சிலையை திறந்து வைத்தனர்.

அப்போது அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது, தமிழக முதல்வர் நகராட்சித் துறைக்கு மட்டும் ஆண்டுதோறும் ரூ.24 ஆயிரம் கோடி ஒதுக்கி தருகிறார். அதனால்தான் இந்த நகராட்சிக்கு கிட்டத்தட்ட ரூ.75 கோடி வழங்கி இருக்கிறார். திருவள்ளூர் நகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக முதலமைச்சரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவேற்காடு, திருநின்றவூர், பூந்தமல்லி, திருத்தணி ஆகிய நகராட்சிகளுக்கு பாதாள சாக்கடை திட்டத்துடன் கூடிய குடிநீர் வழங்கும் திட்டத்திற்காக திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் தமிழக முதலமைச்சர் அதற்கான நிதி ஒதுக்கி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும். இவ்வாறு பேசினார்.

இதில் திமுக நிர்வாகிகள் கே.திராவிடபக்தன், ஆர்டிஇ.ஆதிசேஷன், ஒன்றிய செயலாளர்கள் எஸ்.மகாலிங்கம், கூளூர் ராஜேந்திரன், மோ.ரமேஷ், கே.அரிகிருஷ்ணன், தா.கிறிஸ்டி, நகர அவைத் தலைவர் தி.ஆ.கமலக்கண்ணன், நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குனர் சரவணன், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜெயக்குமார், நகராட்சி ஆணையர்கள் லதா, அருள், தட்சிணா மூர்த்தி, கோபி, நகராட்சி பொறியாளர் நடராஜன், சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், நகராட்சி மேலாளர் சந்திரிகா, உதவி வருவாய் அலுவலர் கருமாரியப்பன், ஓவர்சியர் சரவணன், நேதாஜி, மோதிலால், ஆணழகன் திலீபன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். முடிவில் நகராட்சி ஆணையர் ஏ. திருநாவுக்கரசு நன்றி கூறினார்.

Advertisement