தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆடிப்பூரத்தை முன்னிட்டு திருத்தணி கோயிலில் அலகு குத்தி, காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

திருத்தணி, ஜூலை 29: திருத்தணி முருகன் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு, நேற்று அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு, தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு மலர் அலங்காரத்தில் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, காலை 10 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவருக்கு பாலாபிஷேகம் மற்றும் மகாதீபாரதனை நடைபெற்றது. ஆடிப்பூரத்தை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தணியில் மலர் காவடி, மயில் காவடி, பன்னீர் காவடிகளுடன் மலை கோயிலில் குவிந்தனர்.

ஏராளமான பக்தர்கள் உடல் முழுவதும் அலகு குத்திக்கொண்டு பம்பை, உடுக்கை மேளதாளங்கள் முழங்க முருகப்பெருமானின் பக்தி பாடல்கள் பாடியவாறு அரோகரா முழக்கமிட்டு பக்தி பரவசத்துடன் மலைக்கோயில் மாடவீதியில் சுற்றி வந்து முருகப்பெருமானுக்கு காவடிகள் செலுத்தினர். மேலும், காவடி மண்டபத்தில் வள்ளி தெய்வானை சமேத உற்சவர் முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மலைக்கோயிலில் குவிந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்ததால், மலைக்கோயில் விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது. மலைக்கோயில் மற்றும் நகரின் பல்வேறு மண்டபங்களில் ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. ஆடிப்பூர விழாவையொட்டி 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

Related News