தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

திருமணமாகாத விரக்தியில் கடிதம் எழுதி வைத்துவிட்டு நில அளவையர் தற்கொலை: தண்டவாளத்தில் உடல் மீட்பு

 

திருவள்ளூர், ஜூலை 31: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், புதுமாவிலங்கை கிராமத்தைச் சேர்ந்தவர் ராவணன் (35). இவர் திருத்தணி வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவையாளராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே ராவணன் தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்தனர். ரயிலில் அடிபட்டு படுகாயம் அடைந்து ராவணன் உயிரிழந்தாரா, ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா ? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், திருமணம் ஆகாத மன உளைச்சலில் இருந்த நில அளவையாளர் ராவணன் ஏற்கனவே 5 முறை தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. திருமணமாகாத விரக்தியில்தான் தண்டவாளத்தில் தலையை வைத்து உயிரை மாய்த்துக் கொண்டார். மேலும் தன்னுடைய இறப்பு குறித்து ஏற்கனவே கடிதம் ஒன்றையும் எழுதி வைத்திருந்தார். அதில், ‘நான் இறந்து போனால் பிரேத பரிசோதனை செய்து நேரடியாக சுடுகாட்டிற்கு சடலத்தை கொண்டு செல்ல வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். அந்த கடிதத்தை தன்னுடைய பேண்ட் பையில் அவர் வைத்திருந்தார்.

Related News