தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பூந்தமல்லியில் காரில் கடத்திய ரூ.5 லட்சம் மதிப்பிலான செம்மர கட்டைகள் பறிமுதல்: ஒருவர் கைது

பூந்தமல்லி, ஜூலை 30: பூந்தமல்லியில் காரில் கடத்திய ரூ.5 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தலில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்தனர். பூந்தமல்லி அருகே வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், பூந்தமல்லி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சந்திரமவுலி தலைமையில் தலைமைக் காவலர்கள் ஜேம்ஸ், செல்வம், கிருஷ்ணமூர்த்தி, ராமு மற்றும் போக்குவரத்து போலீசார் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி வந்த காரை நிறுத்த முயன்றனர். போலீசாரைக் கண்டதும் கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதையடுத்து, போக்குவரத்து போலீசார் சினிமா பாணியில் 2 கி.மீ. தூரம் காரை விரட்டிச் சென்று மடக்கினர். அப்போது, காரில் இருந்த ஒருவர் தப்பி ஓடினார். இதையடுத்து, போலீசார் சோதனை மேற்கொண்டு காரின் பின்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும், காரை ஓட்டிவந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

இதில், பிடிபட்டவர் விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமலை பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (38) என்பதும், இவர் ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து செம்மரக்கட்டைகளை காரில் ஏற்றிக்கொண்டு வேலூர் நோக்கிச் சென்றதும் தெரியவந்தது. காரில் சுமார் 500 கிலோ எடை கொண்ட உயர் ரக 7 செம்மரக்கட்டைகள் இருந்தன. இதன் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் காரில் பொருத்தப்பட்டிருந்த நம்பர் பிளேட் போலியானது என்று போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட கார் மற்றும் செம்மரக்கட்டைகளை திருவள்ளூர் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் காரிலிருந்து தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்.

Related News