தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு பேருந்து படிக்கட்டில் பயணித்த பள்ளி மாணவனை கண்டித்த நடத்துநர் மீது தாக்குதல்

திருத்தணி, ஆக. 2: அரசு பேருந்தில் படிக்கட்டுகளில் பயணம் செய்த பள்ளி மாணவன் தட்டி கேட்ட நடத்துனரை தாக்கி காயப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருத்தணி பேருந்து நிலையத்திலிருந்து நேற்று மாலை 5.45 மணியளவில் வீரமங்கலம் செல்லும் அரசு பேருந்து தடம் எண்:65ல் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பயணம் செய்தனர். அரசுப் பேருந்து தற்காலிக ஓட்டுநராக ராஜீவ்காந்தி, தற்காலிக நடத்துனராக அஜித் ஆகியோர் பணியில் இருந்தனர். பயணிகள் கூட்டம் மிதமாக இருந்தாலும், பள்ளி மாணவர்கள் சிலர் பேருந்து படியில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணம் செய்தனர். இதனைக் கண்ட நடத்துநர் 2 மாணவர்களை தட்டிக் கேட்டுள்ளார். அப்போது, மாணவர்களில் ஒருவர் நடத்துநரை அஜித்தை மிரட்டி தாக்கிவிட்டு தப்பினார். இதையடுத்து, முருகூர் பகுதியில் பேருந்து நிறுத்தப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க பேருந்தை இயக்குமாறு தெரிவித்தனர். இதையடுத்து பேருந்து அரைமணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், என்று போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.

Advertisement

Advertisement