தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கும்மிடிப்பூண்டி அருகே மங்காவரத்தான் கோயில் தீமிதி திருவிழா கோலாகலம்

கும்மிடிப்பூண்டி, ஆக. 1: கும்மிடிப்பூண்டி அடுத்த சேலியம்பேடு ஊராட்சி மதுரா மேட்டுப்பாளையம் கிராமத்தில் மங்காவரத்தான் 53 அடி பத்ரகாளி அம்மன் கோயிலில் 12ம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி கடந்த 28ம் தேதி பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்வும், 29ம் தேதி பால் குடம் ஊர்வலம், அம்மன் கரகம் ஊர்வலம் வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. அப்போது, கிராம மக்கள் தங்களது வீடுகளில் கூழ்வார்த்தனர். கோயிலில் ‘வாடை பொங்கல்’ வைத்து அம்மனை வணங்கினர். தொடர்ந்து, காப்பு கட்டிய 112 பேர் வேப்பிலை ஆடை அணிந்தும் நாவில் அலகு குத்தியும் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து மாலையில் தீக்குழியில் இறங்கி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். தீமிதி திருவிழாவைக் காண பள்ளிப்பாளையம், தேவம்பட்டு, அகரம், ரெட்டம்பேடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்தனர். தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் மங்காவரத்தான் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தீமிதி திருவிழாவையொட்டி நடந்த வாணவேடிக்கை நிகழ்ச்சியை பொதுமக்கள் கண்டு ரசித்தனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Advertisement

Advertisement

Related News