தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ. 1.71 கோடி வசூல்: 649 கிராம் தங்கம், 14,000 கிராம் வெள்ளி குவிந்தது

 

திருத்தணி, ஜூலை 24: திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 23 நாட்களில் பக்தர்கள் உண்டியல்களில் காணிக்கையாக ரூ.1.71 கோடி செலுத்தியுள்ளனர். திருத்தணியில் சிறப்பு பெற்ற முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதன்படி ஆடி மாதத்தில் முதல் கிருத்திகையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து உண்டியல்களில் நகை, பணம், பொருட்களை காணிக்கையாக செலுத்தினர்.

இந்நிலையில் கடந்த 23 நாட்களில் பக்தர்கள் செலுத்திய உண்டியல்கள் கோயில் இணை ஆணையர் ரமணி, அறங்காவலர் உஷா ரவி ஆகியோர் முன்னிலையில் நேற்று காலை திறந்து வசந்த மண்டபத்தில் எண்ணப்பட்டது. கோயில் பணியாளர்கள் மற்றும் தற்காலிக ஊழியர்கள் இணைந்து 100க்கும் மேற்பட்டோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். காலை முதல் இரவு 8 மணி வரை நடைபெற்ற பணி முடிவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.64 கோடி ரொக்கம், திருப்பணி உண்டியல் காணிக்கையாக ரூ. 7.17 லட்சம் என மொத்தம் ரூ.1.71 கோடி காணிக்கையும், 649 கிராம் தங்கம், 14,007 கிராம் வெள்ளி காணிக்கையாக செலுத்தப்பட்டதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.