தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆர்.கே.பேட்டை பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி விறுவிறு

 

ஆர்.கே.பேட்டை, ஜூலை 24: ஆர்.கே.பேட்டை பகுதிகளில் கடந்த சில வாரங்களாக விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாடு முழுதும் விநாயகர் சதுர்த்தி அடுத்த மாதம் 27ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை பகுதியில் பல்வேறு இடங்களில் தீவிரம் அடைந்துள்ளது.

குறிப்பாக ஆர்.கே.பேட்டை - சோளிங்கர் செல்லும் நெடுஞ்சாலையில் கடந்த சில வாரங்களாக அப்பகுதியில் விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன காகிதக்கூழ் கொண்டு உருவாக்கப்படும், விநாயகர் சிலைகள் 1 முதல் 10 அடி உயரம் வரை தயாரிக்கப்பட்டு வருகின்றன. அங்கு தயாரிக்கப்படும் சிலைகள் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன.

இந்தாண்டு புதிய வரவாக, சிவன் விநாயகர், ஆஞ்சநேய விநாயகர், சிங்க விநாயகர், பால விநாயகர் ஆகியவை செய்யப்பட்டுள்ளன. வழக்கமான திருமூர்த்தி விநாயகர், பஞ்சமூர்த்தி விநாயகர், ராஜ விநாயகர் என 30க்கும் மேற்பட்ட வகைகளில் விநாயகர் சிலைகள் ரசாயன கலப்பு இல்லாத வண்ணங்களை கொண்டு தயாரிக்கப்பட்டுகின்றன.

இதற்கான மூலப்பொருட்கள் சேலம் மாவட்டத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு சிலைகள் செய்யப்படுகிறது. வழக்கத்தை விட, சுற்றுச்சூழல் மாசு ஏற்படாதவாறு தயாரிக்கப்படும் இந்த விநாயகர் சிலைகள் ஆர்.கே.பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் உள்ளூரிலும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருவதாக சிலை தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.