தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பள்ளிப்பட்டு அருகே சாலையோர பள்ளத்தால் விபத்து அபாயம்

 

பள்ளிப்பட்டு, ஜூலை 25: பள்ளிப்பட்டு அருகே, பொம்மராஜூபேட்டையிலிருந்து மேலபூடி செல்லும் ஒன்றிய சாலையோரத்தில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பொக்லைன் மூலம் சுமார் 500 மீட்டர் தூரம் பள்ளம் எடுக்கப்பட்டது. அங்குள்ள நீர்வரத்து கால்வாயில் கழிவுநீர் விட மேலபூடி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மழைநீர் வடிகால்வாய் பணிகள் நிறுத்தப்பட்டது.

இருப்பினும் பள்ளம் மூடப்படாமல் உள்ள நிலையில் அவ்வழியாக மேலபூடி, சொரக்காய்பேட்டை, நெடியம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று வரும் கிராம மக்கள் சுமார் 4 அடி ஆழத்தில் பள்ளம் எடுக்கப்பட்டுள்ளதால், குறுகிய சாலையில் பேருந்துகள், ஆட்டோ, கார்களில் செல்லும்போது விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும், இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் தவறி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதால், மழைநீர் வடிகால்வாய்க்கு தோண்டப்பட்ட பள்ளத்தை மூட வேண்டும் என்று மேலபூடி கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.