தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

திருவள்ளூர் மோவூர் கிராமத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் திறப்பு

 

திருவள்ளுர், ஜூலை 25: திருவள்ளூர் கலெக்டர் மு.பிரதாப், தரமான ஆவின் கால்நடை தீவனத்தை கறவை மாடுகளுக்கு வழங்கி, பால் கொள்முதல் செய்து, அதிக விலையினை பெற சங்க உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார். இதன்மூலம் அனைத்து பால் உற்பத்தியாளர்களும் ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கி பயனடையுமாறும், கால்நடைகளுக்கு சத்தான தீவனம் வழங்குமாறும் அறிவுறுத்தினார்.

அந்த வகையில், TLR 369 மோவூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்த, கிராமம் FOCUS BLOCKல் உள்ள நிலையில், சங்கத்திற்கு இலவசமாக ரூ.15,220 மதிப்பிலான பால் கொள்முதல் உபகரணங்கள் மற்றும் ரூ.1.59 லட்சம் மதிப்பிலான பால் பகுப்பாய்வு கருவி ஆகியவை வழங்கப்பட்டது. மேலும், உறுப்பினர்கள் அனைவருக்கும் 50 கிலோ கால்நடை தீவனம் மற்றும் 1 கிலோ தாது உப்புக் கலவை வழங்கப்பட்டது.

மேலும் கால்நடை சிகிச்சை முகாம் மற்றும் சினை பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு, சங்க உறுப்பினர்களுக்கு தேவையான கால்நடை மருந்துகள் வழங்கப்பட்டது. கால்நடை மருத்துவ முகாமில் 427 கால்நடைகளுக்கு கோமேரி தடுப்பூசி குடற்புழு நீக்கம், கருவி மூலம் சினை பரிசோதனை, சினை பிடிகாத கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் டில்லிபாபு, ஆவின் பொதுமேலாளர் ராஜ்குமார், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் ஜெயந்தி, பால்வள துணை பதிவாளர் கணேசன், உதவி பொது மேலாளர்கள், துணை இயக்குநர்கள், கால்நடை மருத்துவர்கள், கூட்டுறவு சார்பதிவாளர், முதுநிலை ஆய்வாளர்கள், விரிவாக்க அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related News