தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை மீண்டும் உயர்வு

 

மாதவரம், ஜூலை 24: ஆடி அமாவாசையை முன்னிட்டு கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை மீண்டும் அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது. ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு, கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று காலை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி ரூ.400லிருந்து ரூ.500க்கும், ஐஸ் மல்லி ரூ.300ல் இருந்து ரூ.400க்கும், முல்லை ரூ.250ல் இருந்து ரூ.300க்கும், ஜாதிமல்லி ரூ.300ல் இருந்து ரூ.400க்கும், கனகாம்பரம் ரூ.500ல் இருந்து ரூ.600க்கும், அரளி ரூ.150ல் இருந்து ரூ.200க்கும், சாமந்தி ரூ.150ல் இருந்து ரூ.180க்கும், சம்பங்கி ரூ.80ல் இருந்து ரூ.100க்கும், பன்னீர் ரோஸ் ரூ.100ல் இருந்து ரூ.140க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.120ல் இருந்து ரூ.160க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘‘நேற்று முன்தினம் ஆடி முதல் வாரத்தை முன்னிட்டு அனைத்து பூக்களின் விலை உயரும் என எதிர்பார்த்த நிலையில் மழையின் காரணமாக பூக்களின் விலை தீடீரெஅன குறைந்து விற்பனை செய்யப்பட்டது.

இதனால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு அனைத்து பூக்களின் விலை சற்று உயர்ந்ததால் வியாபாரமும் சுறுசுறுப்பாகவும் நடந்தது. இதனால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இன்றும் இன்னும் பூக்களின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ளார்.

Related News