தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் ஆலோசனை கூட்டம்

 

திருவள்ளூர், ஜூலை 26: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி நடைபெறுவது முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது.

இதில், மாவட்ட கலெக்டர் பிரதாப் தலைமை தாங்கி பேசுகையில், முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் 2025- 2026ம் ஆண்டு மாவட்ட அளவில் 22.08.2025 முதல் 12.09.2025 வரை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு, மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகிய 5 பிரிவுகளில் 53 வகையான விளையாட்டு போட்டிகள் மற்றும் மண்டல அளவில் 14 வகையான போட்டிகளும் என மொத்தம் 67 வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது.

இதையொட்டி குடிநீர், தற்காலிக கழிப்பறை, விழா மேடை அமைத்தல், மைதானம் தூய்மை செய்தல் ஆகியவற்றை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். விளையாட்டு போட்டி நடைபெறும் நாளான ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 12ம் தேதி வரை அனைத்து இடங்களிலும் சுகாதாரக் குழுவுடன் ஆம்புலன்ஸ் எற்பாடு செய்ய வேண்டும், விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு ஆகஸ்ட் 22ம் தேதி நடைபெறும் போட்டிகளில் பங்குபெறும் வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பு ஆசிரியர் ஒருவரை உதவியாளராக நியமனம் செய்ய வேண்டும். மேலும், முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை சிறப்பாக நடைபெறுவதற்கு அனைத்து உறுப்பினர்களும் தங்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும், என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Related News