தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருத்தணி விநாயகர் கோயிலில் உண்டியலை உடைத்து காணிக்கை கொள்ளை: மர்மநபர்களுக்கு போலீசார் வலை

 

Advertisement

திருத்தணி: திருத்தணியில் உள்ள விநாயகர் கோயிலின் உண்டியலை உடைத்து காணிக்கையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருத்தணியிலிருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே குடியிருப்பு பகுதியில் கற்பக விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்தக்கோயிலில் செலுத்தப்படும் காணிக்கைகள் வருடத்திற்கு ஒருமுறை எண்ணப்படுவது வழக்கம். அதனடிப்படையில், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி நிறைவுபெற்றதையடுத்து இக்கோயிலின் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி விரைவில் தொடங்கப்படும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கோயிலுக்குள் புகுந்த மர்மநபர்கள் கோயில் பக்கவாட்டில் இருந்த இரும்பு கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கோயிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலின் பூட்டை உடைத்து அதில் இருந்த காணிக்கைகளை திருடி சென்றுள்ளனர். இதனையடுத்து, வழக்கம்போல் நேற்று காலை கோயிலுக்கு பூஜை செய்ய சென்ற கோயில் பூசாரி உண்டியல் உடைக்கப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக இதுகுறித்து கோயில் நிர்வாகிகளிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, கோயில் நிர்வாகம் சார்பில் திருத்தணி காவல் நிலையத்தில் கோயில் உண்டியல் காணிக்கை திருடு போனது குறித்து புகார் செய்யப்பட்டது. அதே நேரத்தில், அப்பகுதியில் உள்ள மாதவன் என்பவர் சென்னையில் வசித்து வரும் நிலையில் அவரது வீடு பூட்டி இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அந்த வீட்டினுள் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், அவர் வீட்டில் நகை, பணம், விலையுயர்ந்த பொருட்கள் ஏதும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். இதுகுறித்து, திருத்தணி போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்து, வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News