தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

Advertisement

பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த திருநீர்மலையில் பிரசித்தி பெற்ற ரங்கநாத பெருமாள் கோயில் உள்ளது. திருமங்கையாழ்வார் மற்றும் பூதத்தாழ்வார் ஆகியோரால் பாடல் பெற்ற கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இங்கு, பெருமாள் நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என்னும் நான்கு கோலங்களில் காட்சி அளிக்கிறார். சிறப்பு மிக்க இக்கோயிலில் பங்குனி திருவிழா தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக, கடந்த 16ம் தேதி முதல் பங்குனி பிரமோற்சவம் விழா நீர் வண்ணப் பெருமாளுக்கு நடைபெற்று வருகிறது.

வரும் 26ம் தேதி வரை இந்த பிரமோற்சவம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. முன்னதாக பிரமோற்சவம் விழாவை முன்னிட்டு தினமும் காலை மற்றும் மாலை வேளையில் சாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் பெருமாள், தாயாருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது.

பல்லாவரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து வருகை தந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா... கோவிந்தா...’ கோஷம் விண்ணை முட்ட தேரை பிடித்து இழுத்தனர். நான்கு மாடவீதிகளின் வழியாக உலா வந்த தேர் பின்னர் பிற்பகல் 12 மணி அளவில் புறப்பட்ட இடத்திற்கே சென்று நிலை நிறுத்தப்பட்டது.

பக்தர்கள் பக்திப் பாடல்கள் பாடியும், மஞ்சள் நீர் தெளித்தும் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற வேண்டி சாமி தரிசனம் செய்தனர். தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்ற பக்தர்களின் தாகம் தீர்க்கும் வகையில் ஆங்காங்கே நீர் மோர், குளிர்பானங்கள் அப்பகுதி பொதுமக்களால் வழங்கப்பட்டது. கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையிலும் சங்கர் நகர் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

 

Advertisement

Related News