தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் தொடக்கம்: ஒன்றிய குழு தலைவர் பங்கேற்பு

Advertisement

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தை ஒன்றிய குழு தலைவர் ஆர்.டி.அரசு தொடங்கி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம் எடையாத்தூர் கிராமத்தில், வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டம் தொடக்க விழா நேற்று நடந்தது. செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் செல்வபாண்டியன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு முன்னாள் துணை தலைவரும், திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளருமான சரவணன், திருக்கழுக்குன்றம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயராமன், எடையாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மனோஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்எல்ஏவும், திருக்கழுக்குன்றம் ஒன்றிய குழு தலைவருமான ஆர்.டி.அரசு பங்கேற்று, ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்ட விழாவை தொடங்கி வைத்து பேசினார். அப்போது, விவசாயிகளுக்கு ஊட்டச்சத்து இயக்கம் மற்றும் இதர வேளாண்மை சார்ந்த தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்பட்டது. பின்னர், வேளாண்மை துறை மூலம் அவரை, மரத்துவரை, காராமணி விதை தொகுப்புகளும், தோட்டக்கலை துறை மூலம் 6 வகையான காய்கறி தொகுப்பு மற்றும் பழச் செடிகள் ஆகியவை விவசாயிகளுக்கு முழு மானியத்தில் வழங்கப்பட்டது. விழாவில் வேளாண்மை துறை சார்ந்த அலுவலர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement