தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாமல்லபுரம் அருகே கொக்கிலமேடு கிராமத்தில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படும் அபாயம்: போலீசார் குவிப்பால் பரபரப்பு

மாமல்லபுரம், ஜூலை. 18: மாமல்லபுரம் அருகே கொக்கிலமேடு கிராமத்தில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாமல்லபுரம் அடுத்த எடையூர் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் நடராஜன், துணை தலைவரின் கணவர் வெங்கடேசன் ஆகியோர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை, மழைநீர் வடிகால்வாய்கள் அமைத்ததில் பல லட்சம் ஊழல் செய்திருப்பதாக கூறி செங்கல்பட்டு சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் மீனவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், சார் ஆட்சியர் நாராயண சர்மா மீனவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

Advertisement

அப்போது, உடன்பாடு ஏற்படாத நிலையில், மீனவர்கள் பேச்சுவார்த்தையை புறக்கணித்து வெளியேறினர். தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையே கொக்கிலமேடு மீனவர் பகுதியில் தகராறு ஏற்பட்டு கைகலப்பு நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாவதை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொக்கிலமேடு பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கொக்கிலமேடு நுழைவு வாயில், மீனவர் பகுதி உள்ளிட்ட இடங்களில் 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Advertisement

Related News