தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மயிலாடும்பாறை அருகே சேதமடைந்து கிடக்கும் தொகுப்பு வீடுகள்

வருசநாடு, அக். 31: மயிலாடும்பாறை அருகே உப்புத்துரை, தாழையூத்து உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழங்குடியின மக்களுக்கு 60 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டது. இதனையடுத்து மலைகளில் வசித்து வந்த பழங்குடியினர் அனைவரும் தொகுப்பு வீடுகளில் குடியேறினர். இந்நிலையில் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்ட பின்பு அதில் எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

Advertisement

இதனால் பெரும்பாலான தொகுப்பு வீடுகளில் மேற்கூரை சேதமடைந்து காணப்படுகிறது. எனவே மழை பெய்யும் நேரங்களில் மழை நீர் மேற்கூரை வழியாக வீட்டிற்குள் கசிந்து வருகிறது. மேலும் அவ்வபோது வீட்டின் மேற்கூரையில் இருந்து சிமெண்டு பகுதி உடைந்து விழுந்து வருகிறது. வீடுகளை சீரமைக்க வேண்டும் என பழங்குடியின மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் வீடு இடிந்து விடும் என்ற அச்சத்தில் உப்புத்துரை கிராமத்தை சேர்ந்த பழங்குடி இன மக்கள் புலம்பி வருகின்றனர்.

மேலும் பழங்குடியின தாழையூத்து பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘‘எங்கள் மக்கள் சிலர் குடும்பத்துடன் மீண்டும் மலைகளில் குடியேறிவிட்டனர். வீடுகள் சேதம் மற்றும் குடிநீர், சுற்றுசுவர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மீதமுள்ள பழங்குடியினரும் மலைகளுக்கு குடியேறும் மனநிலையில் உள்ளனர். எனவே கடமலைக்குண்டு, உப்புத்துரை, தாழையூத்து உள்ளிட்ட கிராமங்களில் பழங்குடியினருக்கு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளை முறையாக சீரமைக்க வேண்டும். மேலும் பழங்குடியின மக்களுக்கு தேவையான அடிப்படை வசதகிள் செய்து தர மாவட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்’’ என்றனர்.

 

Advertisement

Related News