தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மழையின் போது அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை தொடக்கூடாது: மின்வாரியம் அறிவுறுத்தல்

தேனி, அக். 31: மாவட்டத்தில் கனமழைக்கு பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டுமென மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது: அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை தொடக்கூடாது. அதுபற்றிய தகவலை அருகில் உள்ள மின் பிரிவு அலுவலகத்திற்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்.  வீடுகளுக்கு ஐ.எஸ்.ஜ. தரசான்று பெற்ற மின் சாதனைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும்.

Advertisement

பழுதடைந்த மின்பாதைகள், மின்கம்பங்கள், மின் இழுவைக்கம்பிகள் ஆகியவை குறித்து மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும். மின்கம்பம், மின் வழித்தட கம்பிகளில் துவைத்த துணிகளை காயவைப்பது, ஆடு மாடுகளை கட்டி வைப்பதை தவிர்க்க வேண்டும். அனுமதியின்றி தன்னிச்சையாக மின் வேலி அமைக்கக்கூடாது.

அது தண்டனைக்குரிய குற்றமாகும். மின் வழித்தட கம்பியில் பந்தல் மற்றும் விளம்பர பலகை அமைக்கக்கூடாது. மின் பாதை அடியிலோ, அருகிலோ கட்டடங்கள் கட்டுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக புதிதாக வீடு கட்டும் பொழுது ஏற்கனவே உள்ள வீட்டு மின் இணைப்புகளிலும் கண்டிப்பான இஎல்சிபி (பிரேக்கர்) நிறுவப்பட வேண்டும். இதனால் விபத்துக்களை முற்றிலும் தவிர்க்க முடியும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

 

Advertisement

Related News