அரசு பஸ் மோதி முதியவர் பலி
ஆண்டிபட்டி, ஆக.21: திண்டுக்கல் மாவட்டம் தெப்பத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியகருப்பன்(55). இவர் தனது மனைவியுடன் ஆண்டிபட்டி அருகே உள்ள கரிசல்பட்டி கிராமத்திற்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அப்போது தேனி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில், இருவரும் சாலையை கடக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக தேனியில் இருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்ற அரசு பேருந்து பெரியகருப்பன் மீது மோதியது.
Advertisement
இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement