தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வைகை அணையில் மீன்கள் வரத்து குறைவு

ஆண்டிபட்டி, ஆக. 18: ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை நீர் தேக்கத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு அதிகளவு மக்கள் மீன்கள் வாங்க குவிந்தனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே வைகை அணையில் தனியார் நிர்வாகம் மூலம் மீன்பிடி நடைபெற்று வருகிறது. வைகை அணையில் கட்லா, ரோகு, ஜிலேபி கெண்டை ஆகியவகை மீன்கள் அதிகம் பிடிப்படுகிறது.

இயற்கையாக வளரும் ஜிலேபி கெண்டை மீன்களையே பொதுமக்கள் அதிகம் விரும்பி வாங்கி செல்கின்றனர். 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 69 அடியாக அதிகரித்துள்ள நிலையில், மீன்கள் மீனவர்கள் வலையில் சிக்குவதில்லை. மேலும், மாவட்டத்தில் காற்று வீசும் அளவும் அதிகரிப்பதால் வலையில் மீன்கள் சிக்குவதில் சிக்கல் ஏற்படுகிறது.

இதனால், ஒரு டன் கிடைக்க வேண்டிய இடத்தில் 200 கிலோ அளவிற்கு மட்டுமே மீன்கள் கிடைக்கின்றன. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் நேற்று காலை நூற்றுக்கணக்கான மக்கள் வைகை அணையில் மீன்கள் வாங்க குவிந்தனர். ஆனால், குறைந்த அளவிலேயே மீன்கள் கிடைத்ததால் போட்டி போட்டு வாங்க வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.