தேனியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
தேனி, செப்.17: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வருகிற 19ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் நடக்க உள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளதாவது: தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 19ஆம் தேதி காலை 10.30 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ளது.
இதில் தேனி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைகள் சம்பந்தமான திட்டங்கள் குறித்த கோரிக்கைகளை விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு, மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனுக்களாக வழங்கலாம்.
விவசாயிகளிடமிருந்து பெறப்படும் மனுக்கள், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.